திருக்குறள்

877.

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.

திருக்குறள் 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.

பொருள்:

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

மு.வரததாசனார் உரை:

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.